சனி, 1 நவம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 18!




 
மிகக் கடுமையான விரதங்கள், பூஜைகள் செய்து நாடி மூலம்

பரிகாரங்களும், பலன்களும் கண்டு மிகச் சிறப்பான முறையில் சனிப்

பெயர்ச்சி பலன்கள் தற்போது விறு விறுப்பாக விற்பனையாகிக்

கொண்டிருக்கிறது. பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே படித்துப் பயன்

அடைய முடியும் என்ற வாசகத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறது

அந்த சனிப்பெயர்ச்சி இதழ். இதுவரை எவராலும் செய்யப்படாத விஷயம்

செய்யப்பட்டு இருக்கிறது. ஜோதிட இதழின் வரலாற்றிலேயே முதன்

முதலாக நட்சத்திரங்களுக்கு ஏற்ப ஜீவ நாடி மூலம் மிகத் துல்லிய

பலனகள், பரிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 36

ஆலயங்களும்,  அதன் தொலைபேசி எண்களுடன் உரிய விபரங்கள்

அனைத்தும் அதில் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

   துலாம் இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு சனி மாறுகின்ற சமயம்

நாட்டிற்கு நாடி சொல்லும் செய்திகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிரக ரீதியாக ஆராய்ந்தும், நட்சத்திர ரீதியாக நாடி மூலம் பரிகாரங்கள்

கொடுக்கப்பட்டும் வண்ணப் பக்கங்களுடன் வளமான முறையில் சனிப்

பெயர்ச்சிப் பலன்கள் வந்திருக்கிறது. ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே இந்த

தொடரைப் படிக்க முடியும். அதேபோல் ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே

அந்த சனிப்பெயர்ச்சி சிறப்பு இதழைப் படிக்க முடியும். காரணம் அதில்

சாட்சாத் முருகப் பெருமானின் வாக்கு ஜீவநாடி மூலம் வந்ததைக்

கொடுத்திருக்கிறேன். இப்போது இருக்கின்ற காலச் சூழ்நிலையில் எல்லா

மக்களுக்கும் என்னால் நேரடியாக நாடி படித்து பலன் சொல்ல முடியாது

என்பதால் இறை ஆசியுடன் இராகு-கேது பெயர்ச்சி மூலம் ஒரு

சேவையும், சனிப் பெயர்ச்சி மூலம் இன்னுமொரு சேவையும் நாடி மூலம்

நலம் ஏற்படும் விஷயங்களை தமிழக மக்களுக்காக செய்திருக்கிறேன்.

படித்து பலன் அடையுங்கள் பாங்கான வாழ்வு பெற்றிடுங்கள்.

   ஜீவ நாடி வாக்கு வருவது மிகத் துல்லியமாக இருக்கிறது. இதை

முழுமையாக நம்பி சொல்லும் விஷயங்களை 100% நம்பிக்கையுடன்

கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே 100% நலம் கிட்டுகிறது என்பது அனுபவ

உண்மை.



   ஒருவர் என்னிடம் முதன் முறையாக வந்து நாடி படிக்க வேண்டும்

என்றார். எனக்கு நன்கு தெரிந்தவர்தான். விவசாயத்தைத் தொழிலாகச்

செய்து வருகிறார். சரி ஞானஸ்கந்த மூர்த்தியை பிரார்த்தனை செய்து

ஜீவநாடி சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வந்ததைப் படித்தேன்.

“இன்னவனும் ​இந்நேரம்

அரவிலே ஆபத்தை

எதிர்நோக்கியுள்ள நேரம்

ஆலயம்போல் உண்டு ஒன்று

கருப்பதுவும் உண்டு கேள்

கச்சிதமாய் சேவித்து

தீபமதை ஏற்றி வைத்து

பூஜித்து வா

ஆபத்துமது அருகிலுண்டு

ஆனாலும் கருப்புண்டு

காப்பாற்றும் செல்!

ஆசி”

   என்ற பாடல் வந்தது. அதாவது வந்து அமர்ந்து இருக்கின்ற இவனுக்கு

விரைவில் அரவு என்று சொல்லக்கூடிய பாம்பினால் ஆபத்து வரும். அதே

நேரத்தில் இவர்கள் விவசாய பூமியில் ஆலயம் உண்டு. அங்கு கருப்பு

என்று சொல்லப்படும் கருப்பண்ண சுவாமி உண்டு. அதற்கு தீபம் ஏற்றி

வழிபட்டு வர வருகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவாய் ஆசி! ஆசி!

எனச் சொல்லப்பட்டது. வந்தவர் தனியாக வரவில்லை. அவருடன் 4 பேர்

வந்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது 18 தான் ஆனது. சிறுவனான

என்னிடம் வாக்கு கேட்டு விட்டு வந்தவர் காணிக்கை என்றார். எனக்கு

எப்போதுமே பண ஆசையில்லை. வருகின்ற பணத்தை ஏதேனும்

ஆலயப்பணிக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவது வழக்கம். எந்த

காணிக்கையும் கேட்கவில்லை. இவர் தனது சட்டைப் பைக்குள் கையை

விட்டு ரூ.500ஐ எடுத்து தட்டில் வைக்கப் போனார், அவரது உறவினர்

ஒருவர் திடீரென எழுந்து வந்து வேண்டாம். அவர் காணிக்கை கேட்கவே

இல்லை. தர வேண்டாம் செல்லலாம் என்றார். வந்தவருக்கு மனதிருப்தி

உண்டாகவில்லை. அவரது உறவினரும் விடுவதாக இல்லை. எனக்கு சற்று

மனநிலை மாறியது. சட்டென சுவடியை கட்டி வைத்து விட்டுச் சென்று

விட்டேன்.

   காரணம் பணம் தரவில்லை என்கின்ற வருத்தமில்லை. சித்தர்களை ஒரு

பிள்ளைப் பூச்சி போல் பாவித்து உற்ற மரியாதை தராவிட்டல் அந்த பாவம்

எனக்குமல்லவா வந்து சேரும். என்வே கோபம் வந்துவிட்டது. எனது

வாயில் எது சொன்னாலும் பலித்து விடும். என்வே கோபத்தால் ஏதேனும்

சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தை விட்டு

நகர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்களும் சென்று விட்டார்கள். நானும்

இந்த சமபவத்தை மறந்துவிட்டேன்.

முக்கிய குறிப்பு :- இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சனிபெயர்ச்சி பலன்கள் தனிப்புத்தகம் வேண்டுவோர் குருவருள் சக்தி,திருவருள் ஜோதிடம் மாத இதழ்களை வெளியிடும் அப்ஸரா பப்ளிகேஷன் ராயப்பேட்டை சென்னை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.(அல்லது)திருவருள் சக்தி,குருவருள் ஜோதிடம் மாத இதழ் கிடைக்கும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். 

                                       
                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

4 கருத்துகள்:

  1. Aiya, I’m Shanmugam from Malaysia.
    If my karma allows, I would like to get an appointment with you to read Jeevanadi.
    Hopefully with god grace and blessing I’ll get a chance to meet and get verdict from you.
    If I got "தெய்வத்தின் ஆசியும் மற்றும் உங்களின் ஆசியும்", please email me to the following address.
    rockaustyn@yahoo.com


    Regards, Shan.

    பதிலளிநீக்கு
  2. ஐயா வணக்கம்
    என்னுடைய பெயர் அர்ஐீன்.உங்களுடைய இணையதளத்தை சமீபகாலமாக தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா.
    தற்பொழுது நான் வசிப்பது பிரான்சில்.நேற்று எனது தந்தைகாக ஐுவநாடி படிக்க உங்களிடம் கேட்டவன் அடியவனே. ஆனால் எனது மின்அஞ்சல் முகவரியை கொடுக்க மறந்து விட்டேன் ஐயா, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.( My E-Mail ID : arjoon@hotmail.fr ). உங்களிடம் ஐுவநாடி படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
    தயவு கூர்ந்து அடியேனுக்கு நல் வழி காட்டவேண்டுகிறேன் ஐயா.
    இப்படிக்கு உங்களுடைய இணையதள வாசகன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. Ayya

    with Gods grace I would like to get Jeevanadi reading. Please provide me your contact number.

    Thanks

    பதிலளிநீக்கு
  4. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு