வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி – 11

சென்ற  பதிவின் தொடர்ச்சி


இவருடைய ஜீவகாருண்யம் சரியானதுதான். அதற்கு புண்ணியம் நிச்சயம்

உண்டு. ஆனால் முறையாகப் பிரதிஷ்டை செய்து காலம் காலமாக

பூஜை செய்து வந்த காவல் தெய்வமான கருப்பசாமியை உடைப்பது

நியாயமா? வந்தது இந்த வடிவில் சோதனை. சென்ற ஜென்ம கர்ம

வினைகளே இன்னும் தீராத நிலையில் மீண்டும் இந்த ஜென்மத்தில்

கர்மவினையா? வாசகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். முடிந்த அளவு

பாவ காரியங்களைக் குறைத்து புண்ணிய காரியங்களைச் செய்ய பழகிக்

கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், தேவதைகள், தெய்வங்களோடு

விளையாடக் கூடாது.





நான் கோவையில் தங்கியிருந்த சமயம் ஆவிகளோடு பேசுவதாக ஒருவர்

அறிமுகமானார். அடிக்கடி எனது அறைக்கு வருவார். பூஜையில் கலந்து

கொள்வார். திடீரென இந்த ஆவியுடன் பேசுகிறேன். அந்த ஆவியுடன்

பேசுகிறேன் என்று சொல்வார். சொல்வது நூற்றுக்கு நூறு தவறாக

இருக்கும். ஏன் இவர் இப்படி பொய் சொல்கிறார் என அடிக்கடி உறுத்தியது.

இவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. அதை அடைக்க காப்பீடு

திட்டம் மூலம் முயற்சி செய்தார். தோல்வியில் முடிந்தது. சிகிச்சை

முடிவு மரணம். அன்றே முருகன் உரைத்தார். இவருக்கு அற்ப ஆயுள்

என்று ஆனாலும் பல தீய கர்மாவையும் சம்பாதித்ததால் விளைவு

விபரீதம் ஆனது. பொய்சாமி சொல்வது எனச் சொல்வார்கள். அருள்

வராமலேயே அருள் வந்தது போல் ஆடுவது வாய்க்கு வந்ததை வாக்கு

எனச் சொல்வது போன்றவையும் வம்பை வெத்தலை பாக்கு வைத்து

அழைப்பதுதான். சூட்சும தேவதைகள் சபித்துவிடும். அடுத்தவர்

கர்மாவோடு விளையாடவே கூடாது. அதனால்தான் ஆன்மிகத்தை

கண்டபடி கையாளக்கூடாது என எச்சரித்தார்கள் முன்னோர்கள்.



இன்னுமொரு நபர் எட்சனி வசியம் செய்கிறேன் என களமிறங்கி தனது

தினசரி தூக்கத்தையே இழந்து தவித்து வருகிறார். இப்படி எமது வயது

சிறியதாக இருந்தாலும் ஆயிரமாயிரம் அனுபவங்களை ஞானஸ்கந்தமூர்த்தி

திருவிளையாடலாகச் செய்து வருகிறார்.



இப்படி கருப்பசாமி கோவிலை இடித்தவர் மீது கருணை, ஜீவகாருண்யம்

என்ற நியாயங்கள் இருந்ததால்தான் உனக்கு சொல்கின்ற பரிகாரம் பலிக்கும்

என முருகன் சொன்னார். வேறு ஏதேனும் உள் நோக்கம் இருந்திருப்பின்

விளைவு விபரீதம்தான். மேலும் நமது ஆலயத்திலேயே முருக தீட்சை

பெற்று அடியாராகி மந்திர ஜெபம் செய்து வருவதால் கர்மவினை குறைய

வழி ஏற்பட்டது எனலாம்.



திருவண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வரவே பலர்

சிரமப்படுகிறார்கள். இவர் மூன்று முறை கிரிவலம் வருவார். பல

ஆஸ்ரமங்களில் அமர்ந்து தியானம் செய்வார். இதெல்லாம் இவரை

காப்பாற்றும் செயல்கள். ஆனால் இத்துணை பரிகாரங்கள், பூஜைகள்,

வழிபாடுகள், செய்தும் எதுவுமே பலன் தராமல் போனதற்குக் காரணம்

தேவதா சாபம். தேவதையின் சாபத்தை நீக்க அந்த தேவதையையே

உபாசித்து ஆலயம் கட்டி அர்ச்சித்து ஆராதிக்க வேண்டும். அதற்குரிய

ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சிறிது சிறிதாக, மாற்றம் ஏற்பட்டு

வருகிறது.



ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வாக்கு கேட்க நினைப்பவர்கள்

கவனத்திற்கு ஜீவநாடியில் வந்த சில விதிமுறைகளைச் சொல்கிறேன்.

எவர் ஒருவர் மாதம் தவறாமல் ஞானஸ்கந்தமூர்த்தி ஆலயத்தை 27

முறை சுற்றி அமாவாசையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்களது

கர்மவினை தீரும் என்பது ஜீவ நாடி அருள்வாக்கு.




கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேறிய ஸ்தலம் சென்னிமலை. சிரகிரி

வேலவன் சீக்கிரம் வருக என பாலதேவராய சுவாமிகளால் பாடப்

பெற்ற ஸ்தலம். அந்த சென்னிமலையில் முருகப் பெருமான்

பின்னாக்கு சித்தர் கோவிலுக்கு அருகில் அதிகாலை வேளையில்

மயில் மீது வந்து ஓய்வெடுக்கிறார். அந்த நேரத்தில் எவர் அங்கு

அமர்ந்து தியானம் செய்கிறார்களோ அவர் முருகனது தரிசனத்தையே

பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள் இதுவும் ஜீவநாடி

அருள்வாக்கு.


ஞானஸ்கந்தர் ஜீவநாடியை பக்தியில்லாதவர்க்குச் சொல்லக்கூடாது.

சோதனை செய்ய வருபவர்களுக்கும் உரைக்கக் கூடாது. இதுவும்

ஜீவ நாடி அருள்வாக்கு. அப்படி சோதனை செய்தால் சோதனைக்கும்,

வேதனைக்கும் ஆளாவார்கள்.


ஜீவநாடியை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு உரைக்கக் கூடாது.

வியாபாரமாகவோ இதையே தொழிலாகவோ செய்யக்கூடாது.

இதுவும் ஜீவநாடி அருள்வாக்கு.


ஜீவநாடியை காணிக்கை வாங்காமல் படிக்கக்கூடாது. அவ்விதம்

படித்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்படும். இதுவும் ஜீவநாடி

அருள்வாக்கு.


நாடி கேட்க வருபவர் வீடு, வாசல் சுத்தம் செய்து தனது

குல தெய்வத்தை பூஜித்து வருதல் அவசியம். அப்போதுதான்

முழுமையான பலன்வரும். இதுவும் ஜீவ நாடி அருள்வாக்கு.

நாடிப் பரிகாரங்களை அவர்களேதான் செய்து கொள்ள வேண்டும்.

பரிகாரம் செய்து தருவது கிடையாது.


நாடியில் வருகின்ற பரிகாரங்களை முழுமையாக்க கடைபிடிக்காமல்

பிரச்சினை தீராது. ஆலய தரிசனம் அவசியம் சொன்னது சொன்னபடி

செய்ய வேண்டும்.

பலன் வருவதும், வராமல் போவதும் அவரவர் செய்த

கர்மவினைகளைப் பொறுத்து பலன் அமையும். ஆளைப் பார்த்தோ,

பணத்தைப் பார்த்தோ பலன் உரைக்க முடியாது. உரைக்கவும்

கூடாது.

நாடியில் வருவது அனைத்தும் முருகப்பெருமான், அகத்தியர், சுகர்

மகரிஷி, ஸ்ரீகாகபுஜண்டர் ஆகியோரின் அருள்வாக்கே. இதில்

இடைச்செருகல் ஏதும் இருக்காது. இருக்கவும் கூடாது. இல்லவே

இல்லை.

நாடி படிக்க எந்த திதியும், நட்சத்திரமும் தடை இல்லை. விசேஷமாக

படிக்க வேண்டுமாயின் குரு, சுக்கிரன், சந்திரன் மற்றும் புதன்

ஹோரையில் படிக்க வேண்டும்.

எந்த ஒரு குறிப்பும் ஜீவநாடிக்குத் தேவையில்லை. ஆனாலும் சில

நேரங்களில் ரேகை, ஜாதகம் தேவைப்படும்.

பரிகாரங்கள் செய்து பலன் ஏற்படவில்லை என்றால் மீண்டும் அதே

பரிகாரங்களைச் செய்ய வேண்டும். பலன் கிடைப்பதும், கிடைக்காமல்

போவதும் அவரவர் கர்மவினைப் பொறுத்தே அமையும்.

நாம் எதிர்பார்த்தது அனைத்தும் வரலாம் வராமலும் போகலாம்.

முருகன் என்ன உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால்

போதும்.

கர்மாவைக் குறைக்க ஜீவநாடி வழிகாட்டும். அவதூறு பேசினால்

தீய கர்மா இரண்டு மடங்கு ஏற்படும். பொய் என்பது ஜீவ நாடியில்

இல்லை. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.

நாடி படிக்க உத்தரவு வராமல் யாராக இருந்தாலும் பலன் வராது.

படிக்கவும் முடியாது.

இதைக் கடைபிடிப்பவர்கள் நாடியால் நலன் அடைவார்கள் என்பது

நிச்சயம்.

                                    ஓம் ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

2 கருத்துகள்:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...

    பதிலளிநீக்கு
  2. ஐயா தங்களை சந்திக்க வேண்டும் எனவே கைப்பேசி எண்ணை கொடுக்கவும் 

    பதிலளிநீக்கு