புதன், 16 ஜூலை, 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்-8



ஜீவநாடி மூலம் பலர் பயன் அடைந்து வருகின்றனர். சித்தர்களின் காலம்

விரைவில் ஆரம்பமாகப் போகிறது கலியுகத்தின் கொடுமை இப்போதே

தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. போட்டி, பொறாமை சூது

வஞ்சனை என திண்டாடுகின்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சித்தர்களின் ஆட்சி காலம் விரைவில் வருகின்றதால் நிச்சயம் ஒரு நல்ல

தீர்வு கிட்டும் மக்கள் நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடியை நாடி பலன்

அடைய வேண்டும் என்று அதிகமாக முயற்சி செய்கிறார்கள். அனைவரின்






ஆவலையும் பூர்த்தி செய்கின்ற நிலைமை தற்போது இல்லை. உரிய

காலம் வரும்போது அனைவருக்கும் கிட்டும். அது வரை வாசகர்கள்

பொறுமை காப்பது அவசியம். அனைத்து மக்களுக்கும் ஜீவநாடி மூலம்

பல நன்மைகள் சென்று சேர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்,

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து எழுத்தப் பட்டதே ஜீவ நாடி

மூலம் பரிகாரங்கள் அடங்கிய சனி வக்ர நிவர்த்தி மற்றும் இராகு கேது

பெயர்ச்சி பலன்கள். இதை எழுதும் போது கிடைத்த அனுபவங்கள்

ஏராளம். அதை வேறு ஒரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதில்

ஒன்றை மட்டும் இப்போது சொல்கிறேன். ஸ்ரீ காக புஜண்டர் சித்தரை

பூஜித்து ஜீவநாடியில் வாக்கு கேட்கும் சமயத்தில் ஒரு பெரிய காகம்

ஒன்று எங்கிருந்தோ வந்து வாயிலில் அமர்ந்து கொண்டது. தியானம்

முடித்து கண் விழித்து பார்த்தால் காக்கை. சரி வந்தது புஜண்டர் என்றால்

அவரது துணைவியாரும் இதேபோல் காக்கை வடிவில் வர வேண்டும்

என்று பிரார்த்தனை செய்து கண்களைத் திறந்தால் அந்த காக்கையின்

அருகில் மற்றும் ஒரு காக்கை அமர்ந்து இருந்தது. அப்போது என்னைச்

சுற்றி சுமார் 10 நபர்கள் இருந்தார்கள். அனைவருக்கும் ஆச்சரியம். இந்த

கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என ஆச்சரியப்பட்டார்கள். அதிசயமாக

இருந்தது என பேசினார்கள்.




இது மந்திர வித்தையோ அல்லது மாய வித்தையோ அல்ல. பக்திக்கு

சித்தர்கள் காட்டும் கருணை இப்படி பல அதிசயங்கள் அடங்கி வெளி

வந்ததே அந்த பெயர்ச்சி புத்தகம். அதில் சொல்லப்பட்டுள்ள ஆலயப்

பரிகாரங்களும் 100% பலன் தரக் கூடியவை. பிராப்தம் உள்ளவர்கள் மட்டுமே

வாங்கிப் படித்து பலன் அடையும் புத்தகம். முழுக்க முழுக்க சித்தர்களின்

ஆசியையும், சித்தர்களுக்கெல்லாம் சித்தராய் இருக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்த

மூர்த்தியின் ஆசியையும் பெற்றுள்ள புத்தகம். வாங்கி படித்து, பாதுகாத்து

பயன் அடைவது வாசகர்களின் பிராப்தப்படி நடக்கும். எதற்காக இதை,

இங்கு, இப்படி சொல்கிறேன் என்றால் என்னிடம் நாடி கேட்டு பலன்

அடைய அனைவராலும் முடியாது அதற்குரிய கால அவகாசமும் தற்போது

இல்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் ஜீவநாடி மூலம் எழுதப்பட்ட

பெயர்ச்சி பலன், பரிகாரங்களை அடிக்கடி கடைபிடித்தாலே நமது கர்ம

வினைகள் கறைந்து விரைவில் ஜீவ நாடி படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஜீவநாடி படிப்பதை தொழிலாக யாம் கொள்வதில்லை. இருப்பினும்

இறைவனது ஆசியும், சித்தர்களின் கருணையும் கைகூடி வரும்போது ஜீவ

நாடி என்னிடம் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.



விரைவில் நமது அப்ஸரா பப்ளிகேசன்ஸ் மூலம், ஜீவநாடி மூலம்

எழுதப்படும் சனிபெயர்ச்சி பலன்கள் வெளிவர இருக்கிறது. அது இதுவரை

எவரும் வெளியிடாத, எவராலும் சொல்லப்படாத இரகசியங்களைத்

தாங்கி வெளிவரும். அதற்கும் பிராப்தம் வேண்டும். எமது கட்டுரைகள்

வாசகர்களால் விரும்பி படிக்கப்படுவதன் காரணம், சொன்ன

விஷயங்களையே திரும்ப திரும்ப சொல்லப்படுவதில்லை. நம்பகமான

விஷயங்கள் மட்டும் தான் தரப்படுகின்றன. அனுபவத்தில் அப்படியே

ஒத்து வருகின்றன என்ற காரணங்கள் தான். இவை வாசகர்களால்

சொல்லப்பட்டவை. எனவே எல்லா விஷயங்களும் இறைவன் விதிப்படியே

நடக்கின்றன.

ஒரு பள்ளியின் உரிமையாளர் என்னிடம், நாடி பார்க்க வேண்டும்

என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முருகப் பெருமான்

உத்தரவு கொடுத்தார். சரி வாங்க என்று சொல்லி நாடியைப் பூஜித்து

வாக்கு கேட்கப்பட்டது. வந்தவர் இளைஞர். திருமணம் ஆகாதவர். உயர்

பட்டப்படிப்பு படித்தவர். மிகவும் திறமைசாலி. அழகானவர். பள்ளிக்கூடம்

வைத்து நடத்துவது என்பது சாதரணமான செயல் அல்ல. இவர் திறம்பட

நடத்துகின்றவர். அவருக்கு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் எடுத்த

எடுப்பிலேயே பின் வருமாறு வந்தது.

 “வளமான வள்ளிமலை

வாட்டம் களைகின்ற தருணம்

வாகாகவே சென்று

வர வேண்டுமது

வந்தபின் வரிசையாய்

வசதிகள் கூடும் வாழ்வு மாறும்

வந்திடுவாள் உத்தமி பத்தினி

வடிவேலன் வகைதனிலே வருவாள்

வாகாகவே வளமது கூடும்

வசதிகள் பெருகும்

வல்லமையாகுமே!”






பெரிய பெரிய பலன்கள் வரும் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு சற்று

ஏமாற்றம். என்ன இது வள்ளி மலை செல், எல்லாமே நடக்கும் என

ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாரே. ஜோதிடம் கேட்க சென்றால்

சுமார் ஒரு மணி நேரமாவது சொல்வார்கள். இது என்ன ஜீவநாடி

என்கிறார்கள் இவ்வளவுதான் பலனா? என நினைத்தார். நான் தெளிவாகச்

சொல்லிவிட்டேன். இதில் என்ன வருகிறதோ அதை மட்டுமே படிக்கின்ற

வேலை என்னுடையது அதில் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியாது.

எனவே இதைக் கடைபிடியுங்கள். இதில் சொன்னது எதுவுமே மாறாமல்

அப்படியே நடக்கும் என்றேன். சரி வள்ளிமலை சென்று என்ன செய்ய

வேண்டும் என்று கேட்டார்.

சரி, இவர் திருப்திக்காக மீண்டும் பிரார்த்தணை செய்தேன். பின்வருமாறு

வந்தது

 “ பைரவ வாகனம்

பாங்காக வருமங்கு

பால்சாதமிட்டு வா

பல கர்மம் குறையுமே”

அடுத்து ஆச்சரியமான பலனைச் சொன்னார் முருகப் பெருமான். பைரவரின்

வாகனமான நாய் ஒன்று அந்த வள்ளிமலையில் வரும். அதற்கு பால் சாதம்

போடு. அதை அந்த நாய் சாப்பிட்டால் நீ பல ஜென்மமாக சேர்த்து வைத்த

கர்ம வினைகள் தீரும் என்று தெளிவாக நாடியில் வந்ததை சொன்னேன்.

சரி என ஒப்புக் கொண்டு விபூதி வாங்கிவிட்டு, ஐயா வருகிறேன் என

கிளம்பிவிட்டார். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஐயா தாங்கள் பதிவு செய்து கொடுத்த ஜீவநாடி பாடல்களை அடிக்கடி

கேட்டு வருகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களைச் சந்தித்த நாள்

முதலே நல்ல நிலை தென்படுகிறது. உங்களிடம் ஒரு விண்ணப்பம்,

நீங்களும் என்னுடன் வள்ளி மலையை வந்து தரிசனம் செய்ய வேண்டும்

என்றார்.

1 கருத்து: