திங்கள், 7 ஜூலை, 2014

ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-7

சென்ற பதிவின் தொடர்ச்சி :-





ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு லாரி சென்றது. அதை பெற்றுக்

கொண்டவர் சரக்கு வரவே இல்லை என்று சொல்லி விட்டார். எங்களுக்கு

ஒரு கோடியும் நஷ்டம். தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தோம்.

தங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. ஒரு நபர்

தங்களைப் பற்றிச் சொன்னார். தாங்கள் நாடியில் சொல்லும் பதிலை

வைத்து வாழ்வதா? சாவதா? என முடிவு செய்யலாம் என வந்துள்ளோம்.


தக்க தீர்வு வழங்கவும்” என எழுதப்பட்டதை கண்டு அதிர்ச்சி. நமக்கும்

ஒரு சோதனையை முருகன் வைத்து வேடிக்கை பார்க்கிறான் போலத்

தெரிகிறது. சரி முருகன் உரைப்பதை உரைப்பதே நமது பணி என மனதை

ஒருநிலைப்படுத்தி ஜீவநாடியைப் பிரித்தேன். மடை திறந்த வெள்ளம் போல

பாடல் வடிவில் வாக்கு வந்தது. வாக்கு தந்தவர் ஸ்ரீ அகத்தியர்.

முருகனைப் போற்றி பலன் சொல்ல ஆரம்பித்து பலரும் அதிரும் படி பல

இரகசியங்களை உரைத்து பரிகாரமும் சொன்னார்.



பஞ்ச நதீஸ்வரர் என்றும் ஐயாரப்பர் என்றும் அழைக்கப்படும் ஸ்தலம்

திருவையாறு அங்கு சென்று ஏகாதச ருத்ராபிசேகம் செய்ய வேண்டும்.

அதாவது பதினோறு ருத்ர மூர்த்திகளை அம்மை அப்பன் கலசத்தையும்

சுற்றி கலசம் மூலம் ஆவாஹனம் செய்து சங்கல்பம் செய்து, 11

அந்தணர்களால் பாராயணம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். பின்பு

அந்த 11 சிவாச்சாரியார்களையும் ருத்திரர்களாக பாவித்து அவர்களுக்கு

தட்சினை தாம்பூலம் தந்து ஆசி வாங்க வேண்டும். இவ்விதம் செய்.

நடப்பதைப் பார் என்றார் அகத்தியர்.



வழக்கமாக வருகின்ற முருகனின் வாக்கு வராமல் அகத்தியரின்

வாக்கு வருகிறதே என நான் சிந்திப்பதை புரிந்து கொண்ட அகத்தியர்,

வந்திருப்பவர்கள் அகத்தியர் ஆலய பிரதிஷ்டை செய்தவர்கள் என்றும்,

அடிக்கடி அகத்தியரை பூஜிப்பவர்கள் என்றும், உன்னை வழிபாடு

செய்பவர்களுக்கு நீயே சென்று உரிய வழி சொல் என்ற முருகனின்

உத்தரவால் அகத்தியர் வந்து வாக்கு சொன்னதாகவும் தெரிவித்தார்.

எவ்வளவு அதிசயம் பாருங்கள். வந்தவர்களுக்கு ஒரே ஆனந்தம், அந்த ஒரு

கோடி ரூபாயும் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி.



இதை உரைத்த பின்பு அவர்கள் சொன்ன செய்தி என்னை மேலும் மெய்

சிலிர்க்க வைத்தது. மேலே அகத்தியர் சொன்ன ஆலயத்தில் விபூதி

பிரசாதம் வாங்கும்போது அங்கு ஒரு பெரியவர் “திருவருள் சக்தி” இதழைப்

படித்துக் கொண்டு இருந்ததாகவும் இவர்கள் அவரைப் பார்த்தவுடன்

இவர்களிடம் அந்த பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வேகமாகச்

சென்றதாகவும் சொன்னார்கள். சரி இது எதேச்சையாக நடக்கிறது என

சுமார் ஒரு மாத காலம் அதை புரட்டிக் கூடப் பார்க்காமல் மேஜையின்

மீது போட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினை வந்தவுடன் இந்த “திருவருள்

சக்தி” இதழை புரட்டிப் பார்த்திருக்கிறார்கள்.






அதில் ஜீவ நாடியைப் பற்றிய தொடர் என்னமோ செய்திருக்கிறது

பல முறை படித்தவர்கள் கனவில் இங்கே போ வழி கிடைக்கும் என

உத்தரவு வந்தவுடன் பலமுறை தொடர்புக் கொண்டு சிரமத்தின் பேரில்

வந்து சேர்ந்தார்கள். அதற்குள் அகத்தியர் கோவில் பற்றிய செய்தி

வந்தவுடன் அதிசயப்பட்டு, அந்த அகத்தியரே வந்து வாக்கு சொன்னதால்

ஆச்சரியப்பட்டு, அதிர்ச்சியடைந்து, ஆனந்தமடைந்து பிரிய மனமில்லாமல்

சென்றார்கள். சரி இறைவனின் கட்டளை எதுவோ அது நடக்கும் என நான்

விட்டு விட்டேன். இரண்டு மாதம் கழித்து இவர்களிடம் இருந்து அழைப்பு

வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் சொன்னேன் அந்த நாளில் மீண்டும்

வந்தார்கள்.



ஐயா, பலன் கேட்க வரவில்லை, நடந்த நிகழ்ச்சிகளையும்,

அதிசயங்களையும் சொல்லலாம் என்று வந்திருக்கிறோம் என்றார்கள்.

சரி உரைத்தப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் திருவையாறில் செய்தோம்.

ஸ்ரீ ஐயாரப்பரை ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்

எனத் தெரிந்து அந்த அபிஷேகத்தை கண்ணாரக் கண்டோம். அதே போல்

சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் அறம் வளர்த்த நாயகி அம்மையையும்

அபிஷேகம் செய்து அற்புத அலங்காரத்தைத் தரிசனம் செய்தோம்.

சொன்னது சொன்னபடி செய்து முடிந்த உடனே எனது அலைபேசிக்கு

ஒரு அழைப்பு மணி வந்தது. இது சத்தியமான உண்மை. அந்த சரக்கு

லாரி வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு சிறு பிழை காரணமாக உரிய பதில்

கிட்டாததால் வரவில்லை என்று சொன்னோம். இப்போது வந்து விட்டது

என்ற தகவல் கிடைத்தவுடன் ஒரு கோடியில் பாதியை 50 லட்சத்தை

உங்களது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டேன். மீதியை இன்னும் ஒரு

மாதத்தில் தந்து விடுகிறேன் என்று அந்த நபரிடம் இருந்து பதில் வந்தது.

என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மயக்கமே வந்து விடும் போல்

இருக்கும் நிலையில் ஆலய ஊழியர் ஒருவர் பன்னீர் சோடா ஒன்றைக்

கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போன்று இருந்தது. அந்த அழைப்பு

துண்டிக்கப்பட்ட உடனேயே எனது அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

50 லட்சம் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது என்று. என்னே முருகனின்

கருணை. ஜீவ நாடியைப் பற்றி தற்போதுதான் முழுமையாகப் புரிந்து

கொண்டோம் என்று சொல்லி இது பல பேருக்கும் தெரியட்டும் என

தனது கைப்பட 6 பக்கம் எழுதி கையொப்பம் இட்டு மாலை, மரியாதை

செய்தார்கள். ஆசிர்வதிக்க சொன்னார்கள். முருகா கருணை காட்டு என

ஆசிர்வதித்தேன். இது சத்திய உண்மை ஆதாரம் இருக்கிறது.



எப்படி நடக்கிறது பாருங்கள் இது தான் இறைவனின் திருவிளையாடல். சரி

அந்த அகத்தியர் ஆலயத்தில் “திருவருள் சக்தி” புத்தகத்தைக் கொடுத்தது

யார்? தெரியவில்லை பின்பு அது அகத்தியரின் திருவிளையாடல் எனத்

தெரிந்து கொண்டோம். “திருவருள் சக்தி” புத்தகமும் அகத்தியரின் கைபட்டு

ஆசிர்வதிக்கப்பட்டதால் இந்த இதழ் யார் வீட்டில் இருந்தாலும் அந்த

சித்தர்கள் ஆசி கிட்டுவது திண்ணம். அதில் ஏதும் மாற்றம் இல்லை.



இப்போது அவர்கள் தொடர்ந்து நாடியைக் கடைபிடித்து வருகிறார்கள். பல

அதிசய மாற்றங்கள் இன்னும் நடந்து கொண்டு வருகின்றன. எப்போதோ

செய்த திருப்பணியின் பலன் வாழ்வில் ஒரு கஷ்டம் என்று வரும் போது

எப்படி கை கொடுத்து காப்பாற்றும் என்பதற்கு இந்த கட்டுரையே சாட்சி.

இன்னும் பல இரகசியங்கள் வரும்.



ஒம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை தயவுசெய்து தெரிய படுத்தவும் cp.rajagopal3@gmail.com

    பதிலளிநீக்கு
  3. ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை தயவுசெய்து தெரிய படுத்தவும் jameel1966@gmail.com

    பதிலளிநீக்கு
  4. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...

    பதிலளிநீக்கு