திங்கள், 26 மே, 2014

ஜீவநாடி ரகசியங்கள் பகுதி-1



" ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் ரகசியங்கள்"






ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தமது எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறான். தமது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சமட்டுமில்லாமல் அதையும் தாண்டிய ஒர் ஆர்வமும் காரணமாக அமைகிறது. அப்படி எதிர்காலத்தை சகுனங்கள், நிமித்தங்கள், ஆருடங்கள், பட்சி சாஸ்த்திரங்கள், ஜோதிடம், அருள்வாக்கு, கைரேகை, பிரஸ்னம், ஒலைச்சுவடிகள், எண்கணிதம், டாரெட் அட்டைகள், சோழிப் பிரஸ்னம், தாம்பூலப் பிரஸ்னம், அஷ்டமங்கலப் பிரஸ்னம், குறிகேட்டல், பூ வைத்து கேட்டல், பல்லி மூலம் பலன் காணுதல், கனவு மூலம் பலன் காணுதல், என நீண்ட பட்டியலில் அவரவர்க்கு ஏற்படும் அனுபவங்கள் மூலம், ஏதோ ஒரு வகையில் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்கிறான்.

 இதில் ஏராளமான இரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவைகள் மூலம் தீர்க்க தரிசனம் தந்திடும் அதிசயங்கள் நடந்து கொண்டு குறிப்பாக ஒரு மனிதன் ஏதாவது ஒரு வகையில் ஜோதிடத்தை நாடாமல் இருப்பதில்லை. “ஜோதிடம் பொய்ப்பதில்லை ஜோதிடன்தான் பொய்யாகிறான்” என்ற பழமொழி பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. 

குறிப்பாக எந்த ஒரு வகையில் தீர்வு காண முற்படும்போது அவர் செய்த நல்ல வினைகளும், தீய வினைகளுமே ஜோதிடர் மூலம் பலனாக வெளிப்படுகின்றன. ஒரு மிகப் பெரிய ஜோதிடராக இருந்தாலும் ஒரு சிலருக்கு எந்த பலனையும் சொல்ல முடியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். அதற்க்கு காரணம் ஜோதிடரின் குறையல்ல. வந்து 
கேட்பவரின் கர்மவினையே வெளிப்படுகின்றன.

தனது கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளவே ஜோதிடரை நாடுவதாகக் கூறும் நபர்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என்பது சந்தேகமே. அது என்ன சரியான பாதை என்றால், கடவுள் சிலருக்கு சிலர் மூலமே தீர்வு வைத்திருப்பார். அதாவது சரியான முறையில் சரியான நபரிடம் சென்று பொறுமையாக அவர் சொல்வதை தனது வாழ்வில் கடைபிடித்து வந்தால் முதலில் அவரது கர்மவினை தீரும். அதன் பின்பு வாழ்வில் வசந்தம் ஏற்படும்.

எந்த ஒரு ஜோதிடரிடமோ அல்லது மகானிடமோ சென்ற உடனேயே அதிசய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தடுமாற்றமே தன்னிலை மறந்து முன்னிலை வகிக்கும் அவரவர் கர்மவினை நன்றாக இருந்தால் ஒழிய அதிசயம் நடப்பது அபூர்வம்.


“ஜென்னீ ஜென்ம சௌக்யானம் வர்த்தினி

குலசம்பிரதாம் பதவீபூர்வ புண்ணியானாம்

லிகியதே ஜென்ம பத்திரிகா”

எல்லா ஜாதகத்திலும் எழுதப்படுகின்ற ஸ்லோகம் இது. பூர்வ புண்ணிய பாவங்களை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியே ஜாதகம். ஜாதகத்தில் 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகள், இவைதான் பூர்வ ஜென்மத்தைக் காட்டும் கருவிகள். ஆனால் இன்றைய மக்களின் ஆர்வம் ஜீம்பூம்பா மேஜிக் மாதிரி உடனடியாக எல்லாம் நடக்க வேண்டும் என்ற வகையில் இருப்பதால் பொறுமை என்பது இல்லாமல் போய் வறுமையில் வாட வேண்டியதாகிறது. ஒரே ஜோதிடரை நம்புவதில்லை. பல ஜோதிடப் புத்தகங்களைப் படித்தும் குழப்பம் தீர்வதில்லை. 

அதேபோல் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் உடனடியாக பலன் வேண்டும் என்று கேட்கிறார்கள்.இப்படிப்பட்ட மன நிலையில் உள்ளவர்களை சிலர் பண ஆசைக்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள். 

இந்தப் பொருள் வைத்துக்கொள் அதை வாங்கிக் கொள் என்று வியாபாரம் செய்கிறார்கள். இதில் உண்மையும் இல்லாமல் இல்லை. மக்களிடம் பொறுமை இல்லை. எனக்கு ஒரு வயதான முதியவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒரு ஜோதிடரை அணுகி ரூபாய் ஆயிரம் கொடுத்து யங்திரம் வாங்கினேன் 90 நாட்கள் ஆகிறது எந்த பலனும் இல்லை. பணத்தை திருப்பிக் கேட்டேன் தரமாட்டேன் என்கிறார். திருவருள் சக்தி ஆசிரியரிடம் பேசினேன். உங்களிடம் பேசி உரிய விளக்கம் பெற வலியுறுத்தினார். நான் சென்றது தவறா? நான் இப்பொழுது என்ன செய்வது என்றார்? அவர் பிறவி முழுவதுமே கஷ்டத்தில் இருப்பதாகச் சொன்னார். அவரது மகனுக்கு கேன்சர், மகளுக்குத் திருமணம் ஆகவில்லை. மனைவியும் படுத்த படுக்கை. அவர் மன நிலை என்ன பாடுபடும்.

உண்மைதான் பிறவி முழுவதும் பிரச்சினைகளில் உழன்றவர் அவரது குடும்பமே பாதிப்பாக இருக்கிறது. இது நிச்சயம் பூர்வ ஜென்ம கர்ம வினைதான். பூர்வ ஜென்ம சாபம்தான். இப்படிப்பட்ட கர்ம வினையை ஜோதிடர் கொடுத்த யந்திரம் 90 நாட்களில் குணப்படுத்திவிடும் என்று எப்படி எதிர்பார்ப்பது. பொறுமை தேவை. 

ஒரே ஜென்மத்தில் அத்துணையும் அனுபவித்துவிட முடியாது. பாவம் செய்யும் போது யோசிக்காமல் அதை அனுபவிக்கும்போது அலறினால் என்ன செய்வது? யார் பாவத்தை யார் வாங்கிக் கொள்ள முடியும்.

சரி, இதற்கு தீர்வுதான் என்ன? நிச்சயம் தீர்வு உண்டு. பரிகாரம் செய்துவிட்டால் மட்டும் பாவம் தீர்ந்துவிடுமா? தள்ளிப்போகும் அவ்வளவுதான். நிச்சயம் பிறிது ஒரு முறை அதை அனுபவித்தே ஆக வேண்டும்.ஒரு சிலர் ஜோதிடத்தைக் கூட தன் இஷ்டப்படி சொல்கிறார்கள். சகட்டு மேனிக்குப் பரிகாரம் சொல்கிறார்கள். அடுத்தவர் கர்மாவில் தலையிடும் நாம் சரியான ஆத்ம பலம் பெற்றுள்ளோமோ என்பதை யோசிக்க வேண்டும். 

ஜோதிடம் சொல்பவர்கள் ஆத்ம சக்தியை அதிகரிக்க வேண்டும். உடலுக்கு கவசம் வேண்டும். உடல் கட்டு வேண்டும். அப்போதுதான் அடுத்தவர் கர்மவினை நம்மைத் தாக்காது.எந்த வகையிலும் ஜோதிடம் ஒரு வழிகாட்டி அதைப் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தினால் அதைப்போன்ற ஒரு கலை இந்த உலகில் இல்லை. அதனால் தான் வேதத்தின் ஆறு அங்கத்தில் கண்ணாக இருப்பது ஜோதிடம் ஆகும்.

எல்லா ஜோதிடர்களுக்கும் ஒரு சிறப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது என்னவென்றால் பலன் உரைக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் அப்படியே நடந்தது, நடந்து கொண்டிருப்பதும, நடக்கப்போவது என மிகத் துல்லியகமாகக் கூறி இருப்பார்கள். அதேபோல் ஒரு சிலருக்கு ஏன் இவருக்கு ஜோதிடம் சொன்னோம் என்றாகிவிடும். காரணம் வந்து கேட்பவர்கள் இறைவனால் உங்கள் மூலம் தீர்வு உண்டு என்று தீர்மானம் செய்திருந்தால் மட்டுமே மிகச் சரியாக இருக்கும்.

அப்படி இறைவனால் அனுப்பப்பட்டவரின் கர்மாவும் ஜோதிடரைத் தாக்காது. இப்படி இறைவனால் அனுப்பப்படாதவர்க்கு நீங்கள் என்ன உரைத்தாலும் விரக்தி மனப்பான்மையே ஏற்படும். இப்படி பலர் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். இப்படி நூற்றில் ஒருவருக்கு பலன் உரைப்பதை மட்டும் கடமையாக்குபவர்களுக்கு ஜோதிடம் தொழிலாகச் செய்வது ஒத்து வராது என்பதும் ஒரு விஷயம்.

அதனால்தான் சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் எதிர்காலத்தில் இன்னார்க்கு இன்னது நடக்கும் என்ற விபரங்களை பாடல்கள் வடிவில் இலைமறைகாயாக எழுதி வைத்துள்ளனர். அதில் இன்னார்க்கு இன்னது உரைக்கவும், யாருக்கு எந்த நேரத்தில் உரைக்க வேண்டும் என்றும், யார் நாடி தேடி வருகிறார்களோ 
அவர்களுக்கு உரைக்க வேண்டும் என்றும் எழுதி வைத்தனர். அதில் அகத்தியர், காகபுஜண்டர், சப்தரிஷிகள், ஸ்ரீ சுகர், மீனாட்சி நாடி போன்றவை மிகவும் துல்லியமாகவும் இந்த காலத்திற்கு ஏற்ற வகையிலும் ஒத்து வருவதை அனுபவத்தில் உணர்ந்து பார்க்கிறோம். 

இது ஒலைச்சுவடிகள் மூலம் தனது பெயர், நட்சத்திரம், கிரக நிலைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து பலன் சொல்லும் முறைகள் ஆகும். இதற்கு நாடி ஜோதிடம் என்று பெயர். யார் ஒருவர் நாடி வருகிறார்களோ அவர்களுக்கு உரைக்கும் ஜோதிடத்திற்கு நாடி ஜோதிடம் என்று பெயர்.

எங்கு உண்மை இருக்கிறதோ அங்கு போலிகளும் வருவது இயற்கையே. நல்ல நாடியை நாடிப்போகும் இறைவனின் அருள் நாடி வந்தால் ஒழிய சரியான நாடி கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் எல்லாம் பொய் என்று வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அடுத்து பலன் சொல்லும் ஒரு நிலைக்கு நாடி ஜோதிடம் என்று பெயர். இதில் இலக்கினம் தேவையில்லை. குருவையே இலக்கினமாக வைத்து பார்க்கவேண்டும். 

குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நின்ற வீட்டிற்கு வருவார். அதனால் 12, 24, 36,48 ,60 போன்ற வயது காலங்களை முறையாககக் கணித்து மாற்றங்களைக் கண்டு பிடிப்பார்கள். 60 வயதில் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் அனைத்தும் தான் இருக்குமிடத்திற்கு வரும். அதை மையமாக்கியே அறுபதாம் கல்யாணம் என்றும் சஷ்டியப்த பூர்த்தி என்றும் சடங்கு நடத்தி யாகங்கள் செய்வர். இதை சிலர் 

தவறாக அறுபதாம் கண்டம் என்றும் சொல்வார்கள். அதேபோல் நாடி ஜோதிடத்தில் தொழிலைக் குறிக்கின்ற கிரகம் சனி, மனைவியைக் குறிக்கின்ற கிரகம் சுக்கிரன், தாய்க்கு சந்திரன், தந்தைக்கு சூரியன், கணவனுக்குச் செவ்வாய் என காரகத்துவ அடிப்படையில் நாடி ஜோதிடம் சொல்லும் முறைக்கும் நாடி ஜோதிடம் என்றே பெயர். 

இது ஒரு வகை.

இது இல்லாமல் நாடி வகைகளில் “ஜீவநாடி” என்று ஒன்று இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். உயிரோட்டமுள்ள நாடி என்று பொருள். ஏதாவது ஒரு சித்தர்கள் மூலமாக எழுத்துக்கள் தோன்றி பின்பு மறைந்துவிடும். இது சித்தர்கள் மூலமே கிடைக்கும். அதில் குறிப்பாக அகத்தியர், காகபுஜண்டர், ஸ்ரீசுகர் போன்ற ஜீவ நாடிகள் மிகவும் சிறந்த பலனைத் தருகின்றன. அகத்திய ஜீவநாடி என்றால் அகத்திய மகரிஷி தனது அருள்வாக்காக நாடி படிப்பவர் மூலம் அறிவிப்பதாகும்.

அதேபோல் காகபுஜண்டர் தனது சக்தியை நாடி படிப்பவர் உடலில் செலுத்தி தனது எண்ணத்தை ஒலைச்சுவடி மூலம் ஒளி வடிவில், வரி வடிவில் தோன்றி வெளிப்படுத்தி வந்திருப்பவரின் எதிர்காலத்தை உரைப்பார். ஸ்ரீசுகர் மகரிஷியும் அவ்விதமே தனது ஜீவ நாடியில் வெளிப்படுத்துவார். சுகர் மகரிஷி கிளி உருவம் உடையவர். சாதாரண கிளிகளே சீட்டு எடுத்து ஜோதிடம் சொன்னால் சிலருக்கு அப்படியே பலிக்கிறது எனும் போது சாட்சாத் ஸ்ரீசுகர் மகரிஷியே தனது அருள் வாக்கில் உரைத்தால் எப்படி இருக்கும்.

 அகத்தியர் சாதரணமானவர் அல்ல. ஸ்ரீ முருகப் பெருமானிடமே பிரணவ உபதேசம் பெற்றவர். வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தவுடன் அத்துனை பேரையும் விடுத்து ஸ்ரீ அகத்தியரை குறு முனிவரைச் சென்று சமன் செய்யுமாறு சிவபெருமான் கட்டளை இட்டார் எனில் அகத்தியர் பெருமையை என்னவென்று சொல்வது. பிரளயகாலத்தில் கூட காகமாக மாறி கல்லால மரத்தில் அமர்ந்து பிரளயம் நடப்பதைப் பார்த்து என்றுமே அழிவில்லாமல் இருக்கும் 

காகபுஜண்டருக்கு வேறு விளக்கம் தேவையா? இப்படி இந்த மூன்று சித்தர்கள் மட்டுமல்லாது உபாசனை மூலம் பல தெய்வங்களும், தேவதைகளும், இன்னும் பல சித்தர்களும் ஜீவ நாடியில் வந்து பதில் சொல்வார்கள். 

இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால் சத்தியமான உண்மை. ஜீவ நாடி என்பது சித்தர்களது அருள்வாக்கே. அது சுவடி மூலமும் வரும். சுவடி இல்லாமலும் வரும். சுவடி மூலம் வருவது சற்று துல்லியமாக இருக்கும்.

பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ நாடியில் அறிவிப்பது சூட்சுமமாகவும் இலை மறை காயாகவும் இருக்கும். பலமுறை சுருக்கமான பாடல் வடிவில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளும்படி வரும். சில சமயம் வெறும் வரைபடங்கள் மட்டும் தோன்றும். இப்படி ஜீவ நாடியை ஜீவனுள்ள நாடியாகப் போற்றி வந்தால் முக்காலமும் சொல்லும். 

ஒரு சிலர் கர்ண எட்சினி போன்ற தேவதைகளை வசியம் செய்து நாடி படிப்பதாகச் சொல்கிறார்கள். அது மாந்தீரீகம் சம்பந்தப்பட்டது. அதற்கு உடலில் அதிக பலம் தேவை. ஆனால் சித்தர்கள் வழியில் ஜீவ நாடி படிப்பது ஒரு சுகானுபவம். உடலும் உள்ளமும் சித்தர்கள் அருளால் ஆட்கொள்ளப்படும்.. அது இன்பத்தையும், ஒர் இனம் புரியாத சுகத்தையும் கொடுக்கும். தெய்வங்களே படிக்கும் ஜீவ நாடிக்கு ஈடு இணையே இல்லை.

அடியேன் அடிக்கடி ஜீவ நாடி பற்றி எழுதுவதால் இதை நீண்ட விளக்கமாக வெளியிட வேண்டும் என்று பல வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதைத் தொடராக ஒளிவு மறைவு இல்லாமல் எழுதப் போகிறேன். எமது கட்டுரைகளில் எப்போதுமே சத்தியமும், தர்மமுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி இரகசியங்களை, அதன் திருவிளையாடல்களை, கடந்த 14 ஆண்டுகள் நடந்த அற்புதங்களைத் தொடர்ந்து எழுதுவேன். தன்னிலை விளக்கமாக இது இருக்காது. அனைவரும் இதை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியே சுத்தமான சத்தியமாகவே இருக்கும். பொறுமையாகப் படித்து புரிந்து கொள்ளுங்கள். பல இரகசியங்கள் வெளிவரும். உங்கள் வாழ்க்கை நிலை மேன்மையுறும்

13 கருத்துகள்:

  1. குருவே, அடியேன் தங்களிடம் ஜீவ நாடி பார்த்துக் கொண்டு இருக்கிறேன், அதன் அனுபவங்களை வார்த்தைகளால் கூகூற இயலாது. முருகனே வழி காட்டிக் கொண்டு இருக்கிறார். பூர்வ ஜென்ம புண்ணியமே, தாங்கள் அடியேனுக்கு சொன்ன அனைத்தும் நடக்கிறது. அடுத்த Reading (June 20)கூப்பிடச் சொல்லி உள்ளீர்கள், அந்த நாளுக்காக காத்துக் கொண்டும், பிரார்த்தனை செய்து கொண்டும் உள்ளேன். சொன்ன படியே செய்தும் வருகிறேன். என் இயற்பெயர் B.Ravikumar, Udumalpet. புனைப் பெயர் Bala, தங்களுக்கு அடியேனை நன்றாக தெரியும். .நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அன்புள்ள ரவி அவர்களுக்கு

      உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    3. அன்புள்ள குமார் அவர்களுக்கு,

      எங்களுடைய குருநாதருடைய அனுமதி பெற்று உங்களிடம் தெரியப்படுத்துகிறோம்

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. அய்யா,அருமையான பதிவு...........

    பதிலளிநீக்கு
  3. ayya , i need your mobile number and contact details, kindly inform

    பதிலளிநீக்கு
  4. Vanakkam, will you please provide your contact details including your mobile number. I want to see Jeeva Naadi for me.

    பதிலளிநீக்கு
  5. அன்பு வணக்கம் அய்யா!! என் மின்னஞ்சலுக்கு தயவு செய்து தங்கள் முகவரியையும், தொலைபேசி எண்களையும் அனுப்பி உதவவும். மலேசியாவிலிருந்து வரும்போது தங்களை காண வருவோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பு வணக்கம் அய்யா!! என் மின்னஞ்சலுக்கு தயவு செய்து தங்கள் முகவரியையும், தொலைபேசி எண்களையும் அனுப்பி உதவவும். மலேசியாவிலிருந்து வரும்போது தங்களை காண வருவோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ungal uthavi thaivai.plz.help me.contact number

    பதிலளிநீக்கு