ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா?


முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம்இருந்தாலும்தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டிகவசம்இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள்இவர்,மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிரஅவர் எங்கு,யாருக்கு மகனாக பிறந்தார்எப்படியெல்லாம் வாழ்ந்தார்என்பதற்குஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
250 வயதுஎனினும்கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சிலசொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச்சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறதுகந்தசஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்துஎடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில்சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறதுமேலும்சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும்கணிக்கப்படுகிறது.  பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும்அவைஅனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றனஆனாலும் இப்போது அதிகம்பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றியசஷ்டியைநோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்டகவசம்தான்.
சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டிகவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.  ஒருசமயம்அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்எவ்வளவோசிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்அவர் அங்குவந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்ததுஏற்கனவேபாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்ததிருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்திருவிழாமுடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்றுஎண்ணியவர்முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத்தொடங்கினார்முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனைவழிபட்ட பிறகுகோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்அமர்ந்தார்அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்குஅளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்திவெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்...
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தைமுதன் முதலாக எழுதி முடித்தார்அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு,முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம்,பழனிசுவாமிமலைதிருத்தணிபழமுதிர்ச்சோலைதிருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டிகவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது,அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய்இருந்ததுகந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னைமுருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதைஅறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்அழகன்முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்திருவாசகத்திற்குமனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால்சஷ்டி கவசத்திற்குதங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாதுஅவ்வளவுசக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலைமுருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்அவ்வாறு அவர்பாடியதுதான் சண்முக கவசம்இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டிகவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கதுமுருகனுக்கு உகந்த விரதம் சஷ்டிஇது 6 நாட்கள்மேற்கொள்ளப்படுகிறதுஅதாவதுஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமைதிதியில் தொடங்கிஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தைநிறைவு செய்ய வேண்டும்இதேபோல்முருகப்பெருமானுக்குமுகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்தகார்த்திகைப் பெண்களும் 6 பேர்சரவணபவ என்றமுருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்துஜாதகத்தின் ஆறாம்இடம் பொதுவாக விரோதம்கடன்ரோகம்சத்ரு போன்றவற்றைகுறிக்கும்இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமைகொண்டவரும் முருகப்பெருமான்தான்அதனால்நாம் வழக்கமாகபாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடுமற்ற 5அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றியசஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தைநாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாதுமனம்வாடாதுகுறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்குழந்தைபாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டிகவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக